Tamil Bayan Points

விபச்சாரக் குழந்தைகள்

முக்கிய குறிப்புகள்: பலவீனமான ஹதீஸ்கள்

Last Updated on November 28, 2020 by

விபச்சாரக் குழந்தைகள்

الضعفاء الكبير للعقيلي – (3 / 148)

613 – ومن حديثه ما حدثناه علي بن عبد العزيز قال : حدثنا عارم قال : حدثنا حماد بن سلمة ، عن علي بن زيد ، عن زيد بن عياض ، عن عيسى بن حطان الرقاشي ، عن عبد الله بن عمرو ، أن رسول الله صلى الله عليه وسلم قال : « أولاد الزنا يحشرون يوم القيامة في صورة القردة والخنازير

விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் மறுமை நாளில் குரங்கு மற்றும் பன்றிகளின் தோற்றத்தில் எழுப்பப்படுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: அல்லுஃபாவுல் கபீர் – உகைலீ,

பாகம்: 3, பக்கம்: 148

இந்தச் செய்தியைப் பதிவு செய்த உகைலீ அவர்கள் இந்தச் செய்திக்கு முன்னர் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.

الضعفاء الكبير للعقيلي – (3 / 147)

زيد بن عياض أبو عياض ، بصري حدثنا محمد بن إبراهيم بن جناد قال : حدثنا ابن عائشة قال : حدثنا سلام بن أبي مطيع قال : حدث رجل أيوب يوما حديثا ، فأنكره أيوب ، فقال أيوب : من حدثك بهذا ؟ قال : محمد بن واسع قال : بخ ثقة ، قال : عمن ؟ قال : عن زيد بن عياض قال : لا تزده

அய்யூப் அவர்களிடம் ஒரு நாள், ஒரு மனிதர், ஒரு ஹதீஸை அறிவித்தார். இதை மறுத்த அய்யூப் அவர்கள், இந்தச் செய்தியை உமக்கு அறவித்தது யார்? என்று கேட்டார்கள். முஹம்மத் பின் வாஸிவு என்று சொன்னார். அவர் நம்பகமானவர்தான். அவருக்கு அறிவித்தவர் யார்? என்று கேட்டார். ஸைத் பின் இயாள் என்றார். உடனே இதற்கு மேல் அதிகப்படுத்தாதே என்று நிறுத்திவிட்டார்.

அதாவது ஸைத் பின் இயாள் என்பவர் மோசமானவர். எனவே இது தவறான செய்தி என்பதற்கு இவரைக் கூறியதே போதுமானது சான்று என்பதை குறிக்கவே இதற்கு மேல் அதிகப்படுத்த வேண்டாம் என்று அய்யூப் கூறியுள்ளார்.

இவ்வாறு கூறிய பிறகுதான் இந்தச் செய்தியை உகைலீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இந்தச் செய்தியில் ஸைத் பின் இயாள் என்பவரே இடம்பெற்றுள்ளார்.

الموضوعات لابن الجوزي – (3 / 109)

عن عبدالله بن عمرو أن رسول الله صلى الله عليه وسلم قال: “ أولاد الزنا يحشرون يوم القيامة في صورة الخنازير “.

هذا حديث موضوع لا أصل له.

இந்தச் செய்தியைப் பதிவு செய்த இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி, இதற்கு அடிப்படை எதுவும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல் : அல்மவ்ளுஆத் – இப்னுல் ஜவ்ஸீ,

பாகம் :3, பக்கம் :109

الضعفاء والمتروكين لابن الجوزي – (1 / 306)

1330 زيد بن عياض أبو عياض البصري  قال أيوب لا ترده زيد بن واقد أبو علي السمتي البصري  يروي عن حميد الطويل  وقال أبو زرعة ليس بشيء

ஸைத் பின் இயாள் என்பவர் எந்த மதிப்பும் அற்றவர் என்று அபூஸுர்ஆ அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அல்லுஅஃபாவு வல்மத்ரூகீன் – இப்னுல் ஜவ்ஸீ, பாகம் :1,பக்கம் :306

மேலும் திருக்குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கும் எதிராக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்.

(அல்குர்ஆன் 6:164)

யார் தவறு செய்கிறார்களோ அவரே அந்தத் தவறுக்குப் பொறுப்பாளியாவார் என்று திருக்குர்ஆன் சொல்கிறது. ஆனால் இந்தச் செய்தி, குழந்தை செய்யாத குற்றத்திற்கு அவரைக் குரங்காக, பன்றியாக மாற்றுவதாகச் சொல்கிறது.

விபச்சாரம் செய்த ஆணையோ, பெண்ணையோ தண்டித்தால் அது நியாயம். இதில் எந்த விதத்திலும் தொடர்பில்லாத குழந்தைக்குத் தண்டனை தருவது திருக்குர்ஆனின் அடிப்படைக் கருத்துக்கு எதிரானதாகும். எனவே இந்தச் செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற நிலையை அடைகிறது.

இதைப் போன்று இன்னொரு செய்தியும் உள்ளது.

المعجم الكبير للطبراني – (19 / 142)

337 – حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ: نا الْحُسَيْنُ بن إِدْرِيسَ الْحُلْوَانِيُّ، قَالَ: نا سُلَيْمَانُ بن أَبِي هَوْذَةَ، قَالَ: نا عَمْرُو بن أَبِي قَيْسٍ، عَنْ إِبْرَاهِيمَ بن الْمُهَاجِرِ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بن أَبِي ذُبَابٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:”لا يَدْخُلُ وَلَدُ الزِّنَا الْجَنَّةَ، وَلا شَيْءٌ مِنْ نَسْلِهِ إِلَى سَبْعَةِ آبَاءٍ”. لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ إِبْرَاهِيمَ، إِلا عَمْرٌو

விபச்சாரத்தில் பிறந்த குழந்தை சொர்க்கத்தில் நுழைய முடியாது. (ஏன்) அந்தக் குழந்தையின் சந்ததிகளில் ஏழு தந்தை வரை (பிறந்தவர்களில்) எவரும் நுழைய முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : தப்ரானீ கபீர், பாகம் :19, பக்கம்:142

இந்தச் செய்தியும்  “ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் கருத்துக்கு எதிரானதாகும்.

யாரோ செய்த தவறுக்கு இந்த குழந்தைகளில் ஏழு தலைமுறையைத் தண்டிப்பது எப்படி நியாயமானதாக இருக்கும்?

மேலும் இந்தச் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் இப்ராஹீம் பின் அல்முஹாஜிர் என்பவர் பலவீனமானவராவார்.

الجرح والتعديل – (2 / 133)

قال علي بن المديني قال يحيى – يعني القطان – لم يكن إبراهيم بن مهاجر بالقوي.-حدثنا عبد الرحمن قال قرى على العباس بن محمد الدوري قال وسألت  يحيى بن معين عنه فقال: ضعيف الحديث.

இப்ராஹீம் பின் முஹாஜிர் என்பவர் வலிமை வாய்ந்தவர் அல்ல என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்,

பாகம் : 2, பக்கம் :133.

எனவே இந்தச் செய்தியும் அடிப்படையற்ற பலவீனமான செய்தியாகும்.