Tamil Bayan Points

35) ருகூவில் ஓத வேண்டியது

நூல்கள்: துஆக்களின் தொகுப்பு

Last Updated on July 29, 2022 by Trichy Farook

ருகூவில் ஓத வேண்டியது

اَللّهُمَّ لَكَ رَكَعْتُ وَبِكَ آمَنْتُ وَلَكَ أَسْلَمْتُ خَشَعَ لَكَ سَمْعِيْ وَبَصَرِيْ وَمُخِّيْ وَعَظْمِيْ وَعَصَبِيْ

அல்லாஹும்ம ல(க்)க ர(க்)கஃ(த்)து வபி[B](க்)க ஆமன்(த்)து வல(க்)க அஸ்லம்(த்)து கஷஅ ல(க்)க ஸம்யீ வ ப[B]ஸரீ, வ முக்கீ வ அள்மீ வ அஸபீ[B]

இதன் பொருள் :

இறைவா! உனக்காக நான் ருகூவு செய்கிறேன். உன்னை நம்பினேன். உனக்குக் கட்டுப்பட்டேன். எனது செவியும், பார்வையும், மஜ்ஜையும், என் எலும்பும், என் நரம்பும் உனக்கே பணிந்தன.

ஆதாரம்: முஸ்லிம்-1419 (1290)

ருகூவில் மற்றொரு துஆ

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اَللّهُمَّ اغْفِرْ لِيْ

ஸுப்[B]ஹான(க்)கல்லாஹும்ம ரப்ப[B]னா வபி[B]ஹம்தி(க்)க அல்லாஹும்மபி[F]ர்லீ

இதன் பொருள் :

இறைவா! என் எஜமானே நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். இறைவா என்னை மன்னித்து விடு.

ஆதாரம்: புகாரி-794 , 817, 4293, 4698, 4697

ருகூவில் மற்றொரு துஆ

سُبْحَانَ رَبّيَ الْعَظِيْمِ

ஸுப்[B]ஹான ரப்பி[B]யல் அளீம்.

இதன் பொருள் :

மகத்தான என் இறைவன் தூயவன்.

ஆதாரம்: அஹ்மத்-3514 (3334)

ருகூவிலிருந்து எழுந்த பின்

اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ وَمِلْءَ الأَرْضِ وَمِلْءَ مَا بَيْنَهُمَا وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து மில்அஸ் ஸமாவா(த்)தி வமில்அல் அர்ளி வமில்அ மாபை[B]னஹுமா வமில்அ மாஷிஃ(த்)த மின் ஷையின் ப[B]ஃது

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே! வானங்களும் பூமியும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டவைகளும், மேலும் நீ எதை நாடுகிறாயோ அது நிரம்பும் அளவுக்கு உனக்கே புகழனைத்தும்.

ருகூவிலிருந்து எழுந்த பின் மற்றொரு துஆ

اَللّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி-795 , 7346

அல்லது

رَبَّنَا وَلَكَ الْحَمْد

ரப்ப[B]னா வல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி-689 , 732, 734

அல்லது

رَبَّنَا لَكَ الْحَمْدُ

ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

எங்கள் அதிபதியே! உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி-722 , 733, 789

அல்லது

اَللّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ

அல்லாஹும்ம ரப்ப[B]னா ல(க்)கல் ஹம்து

இதன் பொருள் :

இறைவா! எங்கள் அதிபதியே உனக்கே புகழனைத்தும்.

ஆதாரம்: புகாரி-796 , 3228, 4560